Wednesday, July 4, 2012

கம்ப இராமாயணம் - கம்பனின் அடக்கம்


கம்ப இராமாயணம் - கம்பனின் அடக்கம்


வால்மீகி எழுதிய இராமாயணம் 24000 பாடல்களை கொண்டது.

அதை கம்பர் தமிழில் எழுதினார். கம்ப இராமயாணம் 11000 பாடல்களை கொண்டது.

வால்மீகி எழுதியதை தான் தமிழில் எழுத முற்பட்டதை "எல்லோரும் வாய் அசைத்து பேசுகிறார்களே என்று ஊமையனும் பேச முற்பட்டது போல் வால்மீகி எழுதியதை நான் தமிழில் எழுத முற்படுகிறேன்" என்று அவை அடக்கத்துடன் சொல்கிறார் கம்பர். 

கம்பனே அப்படி சொல்கிறான் என்றால், வால்மீகி எப்படி பட்ட கவிஞராய் இருக்க வேண்டும். 

நாம் பெற்ற பேறு, இந்த மாதிரி மகான்கள் பிறந்த நாட்டில் நாமும் பிறந்து இருக்கிறோம்.
நாம் பெற்ற பேறு, அவர்கள் எழுதி வைத்ததில் ஒரு சில வரிகளையாவது நாம் வாசிக்கிறோம்.

கம்பனின் அந்த அவையடக்கப் பாடல்:

  

Tuesday, July 3, 2012

கந்தர் அநுபூதி - இழந்து பெற்ற இன்பம்


கந்தர் அநுபூதி - இழந்து பெற்ற இன்பம்


நமக்கு செல்வம், பொருள், உறவு இது எல்லாம் சேர சேர இன்பம் பெருகும்.
அல்லது, நாம் அப்படி நினைப்போம்.

ஆனால், அருணகிரி நாதரோ, எல்லாம் இழந்து, தன்னையும் இழந்தபின்னும் நலம் பெற்றதாய் கந்தர் அனுபூதியில் சொல்கிறார்.

இழப்பதில் ஒரு சுகமா ?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்பார் வள்ளுவர். எதில் இருந்து எல்லாம் மனிதன் நீங்கி நிற்கிறானோ, அதனால் அவனுக்கு துன்பம் வராது என்கிறார்.

பற்று குறைய குறைய துன்பம் குறையும்.

துன்பம் குறைய குறைய இன்பம் நிறையும்.

எல்லாம் இழந்த பின் என்ன இருக்கும் ? "நான்" என்ற ஒன்று இருக்கும்.
அதையும் இழந்து விட்டால் ? எவ்வளவு இன்பம் இருக்கும் ?

கந்தர் அனுபூதியில் உள்ள மிகச் சிறந்த பாடல் என்று கீழ் வரும் பாடலை சொல்லுவார்கள்.


திருக்குறள் - நிலையாச் செல்வம்


திருக்குறள்- நிலையாச் செல்வம்




செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும்.




அது பற்றி ரொம்பவும் கவலைப் படக் கூடாது.




மேலும், செல்வம் இருக்கும் போது அதை நல்ல வழிகளில் செலவிட வேண்டும்.




இதை கீழ் காணும் குறளில் சொல்கிறார் வள்ளுவர். மிக மிக ஆழமான, அருமையான குறள்.

திருவாசகம் - நினைத்தால் நெஞ்சம் உருகும்


திருவாசகம் - நினைத்தால் நெஞ்சம் உருகும்


நாம் யாரோடு உறவு / நட்பு வைத்துக் கொள்ள ஆசைப் படுவோம்?

நம்மை விட அழகில், படிப்பில், செல்வத்தில், பதவியில் உயர்ந்தவர்கள் அல்லது சமமானவர்களுடன் உறவோ நட்போ கொள்ள ஆசை படுவோம்.

நம்மை விட கீழே உள்ளவர்களிடம் நாம் உறவோ நட்போ பாராட்டுவோமா ?

இறைவன் நம்மை விட அனைத்து விதத்திலும் உயர்ந்தவன்.

அவன் நம்மிடம் அன்போ, அருளோ பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.

நம்மால் அவனுக்கு ஆகவேண்டியது என்ன ? ஒன்றும் இல்லை.

"தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை,
யார் கொலோ சதுரர்"

என்பார் மணி வாசகர்.

அப்படிப் பட்ட இறைவன், நமக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வந்து நமக்கு உதவி செய்யும் அருளை நினைத்தால், நம் மனம் உருகும் என்கிறார் மணி வாசகர்.

யோசித்துப் பாருங்கள்.

அறுவை சிகிச்சை மூலம் நம் ஒரு காலை அகற்ற வேண்டும் என்றால் ஒரு இலட்சம் செலவு ஆகும்.

எடுப்பதற்கே ஒரு இலட்சம் என்றால் அந்த காலை நமக்கு இலவசமாய் தந்தவனுக்கு எத்தனை இலட்சம் தரலாம் ?

இறைவனின் அருளை நினைக்க நினைக்க நம் சிந்தனை உருகும்.

"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரி நாதர்.

சிந்தனையையை உருக்கும் அந்த திருவாசகப் பாடல் இங்கே...


Monday, July 2, 2012

நாலடியார் - மாலை எனை வாட்டுது


நாலடியார் - மாலை எனை வாட்டுது


இந்த மாலை நேரம் தான் காதலர்களை என்ன பாடு படுத்துகிறது.

இன்று நேற்று அல்ல, நாலடியார் காலத்தில் இருந்தே இந்த பாடு தான்.

அது ஒரு சின்ன கிராமம். சில பல வீடுகள்.

இங்கே ஒரு இளம் பெண், அவளுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பூக்களை கொண்டு மாலை தொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.

நேரமோ மாலை.

சாலையில், வேலை முடிந்து மக்கள் எல்லாம் வீடு திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.

அவளுக்கு, அவளின் காதலன் நினைவு வருகிறது.

அவனுடன் இருந்த இனிய நாட்கள் மனதில் ஓடுகிறது.

பிரிவு சோகம் அவளை சோர்வுறச் செய்கிறது.

கையில் கட்டிகொண்டிருந்த மாலை நழுவி கீழே விழுகிறது.

"ஹ்ம்ம்...இந்த மாலையெல்லாம் கட்டி என்ன பிரயோஜனம்..அவன் இல்லையே என்று ஏங்குகிறாள்.."

பாடலைப் படித்துப் பாருங்கள்...மாலையில் அந்த மாலையில் வந்த காதல் புரியும்....


Sunday, July 1, 2012

நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளவெண்பா - எதிர்மறையில் ஒரு நயம்


நளன் ஆண்ட நகரை சிறப்பித்து கூற வருகிறார் புகழேந்தி.

பொதுவாக கவிஞர்கள் அது நன்றாக இருந்தது, இது நன்றாக இருந்தது என்று வர்ணித்து கூறுவார்கள்.

புகழேந்தி சற்று வித்தியாசமாய் சிந்திக்கிறார்.

இந்த நாட்டில் சில விஷயங்கள் கொஞ்சம் கோணலாய் இருக்கின்றன, சில சோர்ந்து போய் இருக்கின்றன, சில வாய் விட்டு அரட்டுகின்றன, சில கலங்குகின்றன, சில நேர் வழி விட்டு செல்கின்றன என்று சொல்கிறார்.
படிக்கும் நமக்கு, "அட, அப்படி என்ன இருக்கு...அதில் என்ன சிறப்பு" என்று சிந்திக்க தோன்றுகிறது அல்லவா ?

திருஅருட்பா - இறைவா இது உனக்கு சம்மதமா?


திருஅருட்பா - இறைவா இது உனக்கு சம்மதமா?


வள்ளலார் இறைவனிடம் சண்டை போடுகிறார். நீதி கேட்கிறார்.

"நீ எனக்கு அருள் புரியாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்" என்று முறையிடுகிறார்.