Monday, January 7, 2013

திருக் குறள் - அறத்தின் பெருமை


திருக் குறள் - அறத்தின் பெருமை 


அறத்தின் பெருமை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் எங்கும் போக வேண்டாம். பல்லக்கின் மேல் இருப்பவனையும், பல்லக்கு தூக்குபவனையும் பார்த்தாலே போதும்.

பாடல்

Sunday, January 6, 2013

பிரபந்தம் - அறிவின் பயன்


பிரபந்தம் - அறிவின் பயன்


எவ்வளவு படித்தாலும் அதன் பயன் என்ன ? பணம் சம்பாதிப்பது - சொத்து சேர்ப்பது - சேர்த்த சொத்தை அனுபவிப்பது அவ்வளவுதானா ? இதைத் தாண்டி எதுவும் இல்லையா ?

அறிவு பெற்றதின் பலன் மீண்டும் பிறவாமை என்ற நிலை அடைதல். 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

என்பார் வள்ளுவர். மற்று ஈண்டு (இங்கு) வாரா நெறி...இங்கு வரதா முறையை காண்பது மெய்பொருள் கண்டவர்களின் கடமை.  

எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்பார் மணிவாசகர். 

இன்னுமோர் கருப்பையூர் வாராமற் கா என்று புலம்புகிறார் பட்டினத்தார் ....

இங்கு நம்மாழ்வார் இறைவன் தான் அறிவு பெற்றதின் பயன் என்கிறார். இறைவனை அறிதல், பிறவி என்னும் கடலை நீந்தி, அவனை அடைதல் இந்த அறிவு பெற்றதின் பலன்.

எனக்கு தொல்லை தரும் வினைகள் என்னை எப்போதும் என்னை சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. நீ என் அருகில் இருந்தால் அவற்றிற்கும் எனக்கும் உள்ள தொடர்பை அறுத்து, உன் அடி சேர அருள் புரிவாய். இந்த உடல் புலன்களின் ஆசையின் பின்னே சென்று கொண்டு இருக்கிறது. நெய் கொண்டு தீயை அவிப்பதைப் போல, இந்த புலன்கள் கேட்பதை எல்லாம் கொடுத்து அவற்றின் ஆசைகளை நிறைவேற்றப் பார்க்கிறேன். மேலும் மேலும் வேண்டும் என்று அவை கேட்டுக் கொண்டே இருக்கின்றன. அடியில்லாக் குழியில் எவ்வளவு போட்டாலும் அது நிறையாது. அது போல, எவ்வளவு தந்தாலும் இந்த புலன்கள் இவற்றின் ஆசைகளில் இருந்து திருப்தி அடைவதே இல்லை. இப்படி ஆசைகளின் பின்னே போய் இன்னும் எத்தனை நாள் உன்னை விட்டு விலகி இருப்பேன் ?

உன் திருவடியையை அடையும் பேரை எனக்கு அருள்வாயா என்று வேண்டுகிறார். 

பாடல் 

புற நானூறு - வராத குதிரை


புற நானூறு - வராத குதிரை 


இலக்கியங்கள் பொதுவாக அரசர்களையும், அவர்களின் வீர தீர பிரதாபங்களையும், அவர்களின் உறவுகளையும் பற்றியே பேசுகின்றன. அப்படி எழுதுவதால், அரசர்களிடம் இருந்து பரிசு கிடைக்கலாம். அரசியல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாதாரண மக்களை பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள். சொல்லப் போனால், போர்களினால் அதிகம் பாதிக்கப் படுவது சாதாரண மக்கள் தான். குடும்பத் தலைவன் போரில் இறந்து போனால், அந்த குடும்பம் என்ன பாடு படும். இறந்தவனின் மனைவி, அவன் பிள்ளைகள் என்று அவர்களின் துக்கம் சொல்லி மாளாது. 

போரும், அதனால் எப்படி சாதாரண மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் புற நானூறு பேசுகிறது. 

போர் முடிந்து விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் அவர்கள் வீட்டு ஆண்கள் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். என் கணவன் இன்னும் வரவில்லை. குட்டி பையன் வேறு அப்பா எங்கே , அப்பா எங்கே என்று கேட்கிறான். இரண்டு பெரிய ஆறுகள் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடத்தில் உள்ள பெரிய மரம் எப்படி விழுந்து விடுமோ அது போல் அவனும் விழுந்து விட்டானோ ?
 
பாடல் 

Friday, January 4, 2013

திருஅருட்பா - வாலிருந்தால் வனத்திருப்பேன்


திருஅருட்பா - வாலிருந்தால் வனத்திருப்பேன்


பிறர்க்காக வாழ்வது, மற்றவர்களின் இன்பத்தில் தான் இன்பம் காண்பது, தியாகம், போன்றவை மனிதர்களுக்கே உரித்தானது.இரத்த தானம் தரும் மான் இல்லை, காட்டின் விடுதலைக்காக சிறை சென்ற சிங்கம் இல்லை, நாள் எல்லாம் பறந்து களைத்து கொண்டு வந்த நெல் மணியை தானம் செய்யும் புறா இல்லை...பிற உயிர்களை சந்தோஷப் படுத்தி அதில் இன்பம் காணுவது மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு. 

அதை விடுத்து வால் ஒன்று தான் நமக்கும் அதற்க்கும் வித்தியாசம் என்று வாழக் கூடாது. 

பால் சோறாக இருந்தால் வயிறு முட்ட சாப்பிடுவேன். வாழை, பலா, மா என்று பழம் ஏதாவது கிடைத்தால் அதன் தோலைக் கூட கிள்ளி யாருக்கும் தர மாட்டேன். எனக்கு வால் மாட்டும் தான் இல்லை. இருந்திருந்தால், வனத்தில் வாழும் ஒரு மிருகமாக இருக்க எல்லா தகுதியும் உள்ளவன். நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் என்று தன்னை தானே நொந்து கொள்கிறார் வள்ளல் பெருமான்  

பாடல்   


பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய் 

பொருள் 

பாலிலே கலந்த சோறெனில் = பாலோடு கலந்த சோறு என்றால்

விரைந்தே = வேக வேகமாக

பத்தியால் = ஆர்வத்தோடு

ஒருபெரு வயிற்றுச் = என் பெரு வயிறு என்ற. பருத்த தொந்தி நம்மதென்று  நாம் இருக்க சுடுகாட்டு நாய் நரி பேய் கழுகும் தம்மதென்று  தாம் இருக்கும் தான் என்பார் பட்டினத்தார் 


சாலிலே = பெரிய பாத்திரத்தில் 

அடைக்கத் தடைபடேன் = அடைக்க தயக்கம் கொள்ள மாட்டேன்

வாழை தகுபலா மாமுதற் பழத்தின் = வாழை, பலா, மா முதலிய பழங்களின்

தோலிலே எனினும் = தோலில் கூட
 
கிள்ளி = நகத்தால் கிள்ளி  எடுத்து

ஓர் சிறிதும் = ஒரு சின்ன துண்டு கூட 

 சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = என்னிடம் வந்தவர்களுக்கு தர துணிய மாட்டேன்

வாலிலேன் = எனக்கு வால் மட்டும் தான் இல்லை 

 இருக்கில் = இருந்திருந்தால் 

வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = நான் காட்டிலே மற்ற மிருகங்களோடு ஒன்றாக வாழ நல்ல வாய்ப்பு இருந்திருக்கும்

என்செய்வேன் எந்தாய்  =நான் என்ன செய்வேன், என் தந்தையே 

திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


திரு மந்திரம் - கொடுத்துப் பாருங்கள்


எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைகிறோம். பணம் இல்லாதவன் பணத்திற்கு அலைகிறான். பணம் இருப்பவன் அன்புக்கு அலைகிறான். நிம்மதிக்கு அலைகிறான். வேண்டாதார் யார் ?

மனித மனம் அடியற்ற பாத்திரம். எவ்வளவு இட்டாலும் நிறையாது. எப்போதும் குறையுடனேயே அலையும். பார்ப்பது எல்லாம் வேண்டும். கண்ணில் படுவது கையில் வேண்டும்.  

பெறுவதிலேயே கவனமாய் இருந்தோமே, கொடுப்பதை பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா ? கொடுக்கும் சுகம் அறிந்தால், பெறுவதில் உள்ள சுகம் மறையும். .அறம் செய்ய விரும்பு என்றால் அவ்வை. கொடுக்கும்போது திருப்தி வரும். நாம் ஒருவருக்கு உதவி செய்தோம் என்ற மன நிறைவு வரும். இன்னும் கூட செய்யலாமே என்ற எண்ணம் வரும். பிறருக்கு நன்மை செய்யும் இடத்தில் நம்மை வைத்த இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும். அமைதியும், இன்பமும் பிறக்கும். 

கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லையே...தானம் செய்யும் அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய பணக்காரான என்று கேட்பவர்களுக்கு திருமூலர் பதில் சொல்கிறார். 

நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் தெரியமா ? நீங்கள் கடவுளுக்கே கொடுக்கக் கூடிய அளவுக்கு பெரியவர். கடவுள் நம்மிடம் என்ன கேட்க்கிறார்...ஒரே ஒரு பச்சிலை...ஒரு துளசி தளம். அவ்வளவு தான் அவனுக்கு வேண்டும். அன்போடு ஒரே பச்சை இலை கொடுத்தால் போதும் அவனுக்கு. அது முடியாதா ? 

எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை. அப்படியே கடவுள் இருந்தாலும், அவருக்கு ஒரு பச்சிலை கொடுப்பதால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று வாதிப்பவர்களும் இருக்கலாம். 

வேண்டாம், நீங்கள் கோவிலுக்குப் போக வேண்டாம், சாமி கும்பிட வேண்டாம்...மற்ற உயிர்கள் மேல் அன்பு இருக்கிறதா உங்களுக்கு ? போகிற வழியில் நாலு புல்லை பிடுங்கி வழியில் நிற்கும் பசுவுக்கு வயிறார கொடுங்கள். செய்யலாம் தானே ?

எங்க அபார்ட்மெண்ட் பக்கம் புல்லும் இல்லை பசு மாடும் இல்லை. இதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். தினம் சாபிடுவீர்கள் தானே ? அதுக்கு நேரம் கட்டாயம் இருக்குமே ? அப்படி சாப்பிடும் போது, ஒரு கை உணவை காக்கைகோ, குருவிக்கோ கொடுங்கள். 

என்னங்க நீங்க புரியாத ஆளா இருக்கீங்க...அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், பெரிய உணவகங்களில் சாப்பிடும் போது காக்காவையும் , குருவியையும் எங்க போய் தேடுவது என்று அலுத்துக் கொள்கிறீர்களா ?

ஒண்ணும் முடியாவிட்டால், மற்றவர்களுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லுங்கள்..அதுவே பெரிய தர்மம்தான். பொய் இல்லாத, கபடம் இல்லாத, சுடு சொல் இல்லாத...இனிய வார்த்தை சொல்லுங்கள்...அது கூட ஒருவிதத்தில் தானம் தான்....

சொல்லித் தெரியாது காமம்
சொன்னாலும் புரியாது தர்மம்...

கொடுத்துப் பாருங்கள், அதன் சுகம் தெரியும்.....

வறிஞர்க்கு நொயிர் பிளவேனும் பகிர்மின்கள் என்பார் அருணகிரி....

பாடல் 

Wednesday, January 2, 2013

இராமாயணம் - சீதையின் அன்னை


இராமாயணம் - சீதையின் அன்னை


ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம் தான். 

சொல்லும் நமக்கு வேண்டுமானால் அது சாதரணமாக இருக்கலாம், 

கேட்பவர்களுக்கு அது சில சமயம் உயிர் காக்கும் மருந்தாகவும் அமையலாம். உயிர் கொள்ளும்/கொல்லும்  நஞ்சாகவும் அமையலாம்.

அரக்கியின் வார்த்தைகள் திருமகளான சீதையின் உயிரை காத்தது.  

அசோகவனத்தில் சீதை துயரமே உருவாக இருந்தாள். ஒரு கட்டத்தில் உயிரை விடவும் துணிந்தாள். இராவணன் தந்த துன்பம் சொல்லி மாளாது அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல் திரிசடை. 

திரிசடை ஆறுதலான வார்த்தைகளை சொல்லி சீதைக்கு துணையாக இருந்தாள். யுத்தம் முடிந்து சீதை அசோக வனம் விடும் போது, நன்றி மறவாமல் திரிசடையை பார்த்து கூறுகிறாள் 

தாயே, நீ பலமுறை எனக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இருக்கிறாய்..இராம தூதுவன் வருவான், இராமன் வருவான் என்றெல்லாம் நீ கூறிய வார்த்தைகள் எதுவும் பொய்யாகப் போனது இல்லை. இப்படி நீ சொன்னது எல்லாம் நடந்ததால், உன்னையே தெய்வமாக நான் நினைத்து இத்தனை காலம் உயிர் வாழ்ந்தேன். நான் உயிரை விட என்றோ முடிவு செய்து விட்டேன். நீ சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் இன்று வரை உயிர் வாழ்ந்தேன் என்றாள். அப்படி சொன்னது யார் ? தாமரை மலரை விட்டு வந்த திருமகள். 

நன்றி மறக்காத சீதையின் தாயன்பு

சீதையையை மகளாக எண்ணி அவளுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி அவள் உயிர் காத்த திரிசடையின் தாயன்பு...

கண்ணில் நீர் பனிக்கும் அந்தப் பாடல்...

பாடல்

Tuesday, January 1, 2013

தேவாரம் - ஆசைக்கோர் அளவில்லை.


தேவாரம் -  ஆசைக்கோர் அளவில்லை. 

 
மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. பற்றை விட வேண்டும் என்று சொல்ல வந்த வள்ளுவர் கூட பற்றுக பற்றற்றான் பற்றினை என்று கூறுகிறார். எல்லாவற்றையும் விடுங்கள் என்று சொல்லவந்த வள்ளுவர் பற்றற்றான் பற்றினை பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

விட முடியவில்லை. 

திருமூலர் ஒரு படி மேலே போகிறார். இறைவனை கூட அடைய ஆசைப் படாதீர்கள் என்கிறார். 

ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்

இறைவனை அடைய வேண்டும் என்பதும் ஆசை தானே. உள்ளதிற்குள் பெரிய ஆசை அது தான். பேராசை. இறைவனை அடைய வேண்டும் ஆசைப் படுபவன் எப்படி துறவி ஆக முடியும்....

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

எங்கே முடிகிறது ? உலகம் எல்லாம் ஆளக் கிடைத்தாலும் அந்த கடல் மேலும் ஆதிக்கம்  செலுத்த ஆசை வருகிறது. குபேரன் அளவு சொத்து இருந்தாலும் ரசவாத வித்தை கற்று உலகில் உள்ள இரும்பை எல்லாம் தங்கமாக ஆசை வருகிறது. எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் காயகல்பம் தேடி அலைகிறார்கள். கடைசியில் உண்பதுவும் உறங்குவதும் தவிர வேறு ஒன்றும் இங்கு நிகழ்வது இல்லை. 

குழந்தையாக இருக்கும் போது பொம்மை, விளையாட்டு சாமான் என்று ஆசைப் படுகிறோம், அப்புறம் புது புது ஆடைகள், பேனா, புத்தகம், என்று போகிறது ஆசை, வயது வரும் போது எதிர் பாலின் மேல் ஆசை, அப்புறம் வேலை, பணம், அதிகாரம், சொத்து, என்று ஆசைக் கொடி படர்கிறது, பின் நல்ல உடல் ஆரோக்கியம், படுத்தால் தூக்கம், என்று ஆசையின் அளவு குறைகிறது....   நாள் ஆக ஆக இறைவன், சொர்க்கம் என்று ஆசை தடம் மாறுகிறது...இப்படி கிளை விட்டு கிளை தாவும் மனக் குரங்கு. இதில் எந்த ஆசை உயர்ந்தது எந்த ஆசை தாழ்ந்தது ? எந்த ஆசையும் இல்லாமல் இருக்க ஆசைப் படுகிறார் தாயுமானவர் இங்கே...

பாடல்


ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
    ஆளினுங் கடல்மீதிலே
  ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
    அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
    நெடுநா ளிருந்தபேரும்
  நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
    நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
    உறங்குவது மாகமுடியும்
  உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
    ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
    பரிசுத்த நிலையை அருள்வாய்
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற
    பரிபூர ணானந்தமே.


பொருள் 

ஆசைக்கோ ரளவில்லை = ஆசைக்கு ஒரு அளவில்லை

அகிலமெல் லாங்கட்டி ஆளினுங் = அகிலம் எல்லாம் கட்டி  ஆட்சி செய்தாலும்

கடல்மீதிலே = கடல் மீதும்

ஆணைசெல வேநினைவர் = ஆட்சி செய்ய நினைப்பார்கள்

 அளகேசன் நிகராக = அளகேசன் என்றால் குபேரன். குபேரனுக்கு நிகராக

அம்பொன்மிக வைத்தபேரும் = செல்வம் நிறைய இருக்கும் ஆட்களும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர் = இரசவாத வித்தை கற்றுக் கொள்ள அலைவார்கள்

நெடுநா ளிருந்தபேரும் = நெடு நாள் இருந்த ஆட்களும்

நிலையாக வேயினுங் = இன்னும் சாகாமல் இருக்க

காயகற் பந்தேடி = காய  கல்பம்  தேடி 

நெஞ்சுபுண் ணாவர் = மனம் வருந்துவர்

எல்லாம் யோசிக்கும் வேளையிற் = எல்லாம் யோசித்துப் பார்த்தால்

பசிதீர உண்பதும் = பசியாற உண்பதும்

உறங்குவது மாகமுடியும் = உறங்குவதும் ஆக முடியும்

உள்ளதே போதும் = உள்ளதே போதும்

நான் நான் = நான் நான், எனக்கு எனக்கு

எனக் குளறியே = என்று குளறி

ஒன்றைவிட் டொன்றுபற்றிப் = ஒன்றை விட்டு ஒன்று பற்றி

பாசக் கடற்குளே வீழாமல் = பாசக் கடலில் விழாமல்

மனதற்ற = மனதற்ற. மனம் இருந்தால் தானே ஆசை வரும். மனமே இல்லா விட்டால் ? 

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபுபதியே என்பார் அருணகிரி. நமக்கு எல்லாம் கிடைத்தால் சுகம். அவருக்கு எல்லாம் இழந்தால் சுகம். 

வித்தாரமும் கடம்பும் வேண்டாவாம் மட நெஞ்சே செத்தாரைப் போலத் திரி என்றார் பட்டினத்தடிகள்

பரிசுத்த நிலையை அருள்வாய் = பரி சுத்தமான நிலையை அருள்வாய் 

பார்க்குமிட மெங்கு = பார்க்கும் இடம் எங்கும்

மொரு நீக்கமற நிறைகி்ன்ற = ஒரு நீக்கம் இல்லாமல் நிறைந்து இருக்கின்ற

பரிபூர ணானந்தமே = முற்றும்  நிறைந்த ஆனந்தமே