Sunday, February 10, 2013

புற நானூறு - இலையின் கீழ் நத்தை


புற நானூறு - இலையின் கீழ் நத்தை 

எங்கு பார்த்தாலும் பயங்கர வெயில்.  சுட்டு எரிக்கிறது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு கிளை பரப்பி நிற்பதைப் பார்த்தால் மழை வேண்டி வான் நோக்கி கை விரித்து வேண்டுவது போல இருக்கிறது. கோடை மழை வந்த பாடில்லை. 

குளம் குட்டைகளில் நீர் வற்றி சேறும்  சகதியுமாய் இருக்கிறது. அந்த சகதியும் சூடாக இருக்கிறது. 

ஒதுங்க இடம் இல்லை. அந்த குளத்தில் ஒரு நத்தை வசித்து வந்தது வெயில் அதையும் வாட்டியது. வெயிலுக்கு பயந்து அதால் ஓட முடியாது. வெப்பம் தாங்கமால் தவித்தது. 

அந்த குளத்தில் முளைத்து இருந்த ஆம்பல் செடியின் இலையின் கீழ் மெல்ல ஊர்ந்து சென்று வெயிலின் இருந்து தன்னை காத்துக் கொண்டது. 

மன்னா, வறுமை என்னும் வெயில் என்னை வாடுகிறது. என்னால் வேறு எங்கும் செல்லவும் முடியாது. வீட்டுக்கு யாராவது வந்து விட்டால் அவர்களை  எப்படி உபசரிப்பது என்று தெரியாமல் நான் ஒளிந்து கொள்கிறேன் .

உன்னிடம் வந்து என் வறுமையை சொல்கிறேன். நீ என்னை ஆதரிப்பாய் என்று நினைக்கிறேன் 

பாடல்  


பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகு என்னும் பூசல்போல
வல்லே களைமதி அத்தை; உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே.


பொருள் 

பயங்கெழு மாமழை பெய்யாது = பயன் தரும் பெரிய மழை பெய்யாது 

மாறிக் = மாறி 

கயங் = குளம்

களி = குளத்தில் உள்ள சேறு களி  போல் ஆகி 

முளியும் = வேகும் 

கோடை ஆயினும் = கோடை ஆனாலும் 
,
புழற்கால் ஆம்பல் = துளையை உள்ள ஆம்பல் செடியின் 

அகலடை நீழல் =அகன்ற இலையின் நிழலில் 

கதிர் = சூரிய ஒளி 

கோட்டு = கொம்பு உள்ள 

நந்தின் = நத்தையின் 

சுரிமுக ஏற்றை = வளைந்து நெளிந்து செல்லும் ஆண்  நத்தை 

 நாகுஇள வளையொடு = பெண் சங்கொடு பகலில் கூடும் 

நீர்திகழ் கழனி = நீர் உள்ள  கழனிகளை , வயல்களை   

நாடுகெழு = உள்ள நாட்டை கொண்ட 

பெருவிறல் = பெரிய வெற்றிகளை கொண்ட 

வான்தோய் நீள்குடை = வான் வரை நீண்ட அதிகாரம் உள்ள 
,
வயமான் சென்னி = ஆற்றல் உள்ள சென்னி (அரசன் 

சான்றோர் இருந்த அவையத்து = சான்றோ உள்ள அவையில் 

உற்றோன் = உதவி வேண்டி வந்தவன் 

ஆசாகு = பற்றுதல் வேண்டி, உதவி என்று கேட்டு 
 
என்னும் பூசல்போல = பூசல் என்றால் அறிவித்தல். உதவி என்று அவையில் கேட்ட பின் 

வல்லே களை = விரைவாக அவன் துன்பத்தை களைய 

மதி அத்தை = அசை சொற்கள் 

உள்ளிய = நினைத்த 

விருந்துகண்டு = விருந்து வருவதை கண்டு 

ஒளிக்கும் = ஒளிந்து 

திருந்தா வாழ்க்கைப் = தவறு தான் என்றாலும் திருத்த முடியாமல் வாழும் வாழ்க்கை 

பொறிப்புணர் உடம்பில் தோன்றி = என்னுடைய மற்ற அவயங்கள் (பொறி) தோன்றி ஒழுங்காக இருந்தாலும் 
 
என் = என்னுடைய 

அறிவுகெட நின்ற = அறிவு மட்டும் தடுமாறுகிறது 

நல்கூர் மையே = காரணம் என் வறுமையே  (நல்  கூர்மை = வறுமை )

.
பாடல் எழதும் களம் எவ்வளவு முக்கியம் என்று இந்த பாடலில் இருந்து அறிய முடிகிறது.

வெயில் = வறுமை 

நத்தை = போராட வலிமை இல்லாத புலவன் 


ஆம்பல் இலை = அரசனின் இரக்கம் 

கொதிக்கும் குளம் = சுற்றமும் நட்பும்..நீர் இருந்தாலும் உதவி செய்ய முடியாத அவர்களின் வறுமை 

விருந்துக்கு ஒளிந்து கொள்ளுதல் = தமிழ் கலாசாரம். விருந்துக்கே ஒளிந்து கொள்வது என்றால் கடன் காரன் வந்தால் ?

அறிவு கெடுக்கும் வறுமை = யாசகம் கேட்பது தவறு என்று தெரிந்தாலும் அதை செய்ய தூண்டும் வரும் .

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் - வறட்சி, வறுமை, இவற்றை துல்லியமாக படம் பிடித்து காட்டும் பாடல். 

Saturday, February 9, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - வழியைக் கடக்க


இராமானுஜர் நூற்றந்தாதி - வழியைக்  கடக்க


மொழியைக் கடக்கும் பெரும்புக ழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.

கூரத்தாழ்வானின் புகழை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மொழியின் எல்லைகளை கடந்தது அவன் புகழ்.

வஞ்சகமான மூன்று கொடிய குணங்களில் இருந்து கடக்க அவன் நாமமே சரண்

நாம் சேர்த்து வைத்த பழியையை கடத்த இராமானுஜனின் புகழ் அல்லால் வேறு ஒன்றும் இல்லம்

பொருள்:

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் = மொழியை கடந்து நிற்கும்  புகழை உடையவன்.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே!       

என்பது அபிராமி அந்தாதி.



வஞ்ச முக்குறும்பாம் = வஞ்சகம் செய்யும் மூன்று கெட்ட  குணங்கள். கல்வி செல்வம், குல செருக்கு என்று கொள்ளலாம். அல்லது காமம், குரோதம் மாச்சர்யம் என்றும் கொள்ளலாம். அந்த மூன்று கெட்ட குணங்கள் என்ற

குழியைக் கடக்கும் = குழியில் விழுந்து விடாமல் அதை தாண்டிப் போய்


நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் = நம் கூரத்தாழ்வானின் திருவடிகளை அடைந்த பின்

பழியைக் கடத்தும் = நாம் செய்த பழிகளை கடத்தும்.

முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோள்கள் என்பார் அருணகிரி.

இராமா னுசன்புகழ் பாடியல்லா = இராமானுஜன் புகழ் பாடுவதைத் தவிர

வழியைக் கடத்தல் = வழியை கடந்து செல்லுதல். வழி என்றால் நல்ல வழி மட்டும் தான். பெரியவர்கள் கெட்ட  வழியையை சொல்லுவது இல்லை.

நெறியல்லா நெறிதன்னை நெறியாக முயல்வனே என்பார் மணிவாசகர். நெறி அல்லாத நெறி தீ நெறி.

துணையோடு அல்லது நெடு வழி போகேல் என்றாள் அவ்வைப் பாட்டி.

வைகுண்டம் எவ்வளவு தூரம்?

அவ்வளவு தூரம் துணை இல்லாமல் போகலாமா ?

இராமானுஜன் திருவடிகளே துணை.

எனக்கினி யாதும் வருத்தமன்றே.= எனக்கு இனிமேல் ஒரு வருத்தமும் இல்லை.



Friday, February 8, 2013

அபிராமி அந்தாதி - உன்னை அறிவேன்


அபிராமி அந்தாதி - உன்னை அறிவேன் 


துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் 
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

அபிராமி, நீ என் வாழ்க்கை துணை. 

துணையும்: துணை எப்போது தேவைப்படும் ? பயம் வரும்போது, துன்பம் வரும்போது, ஒரு சிக்கல் வரும்போது துணை தேவைப்படும். ரொம்ப சந்தோஷம் வந்தாலும் அதை பகிர்ந்து கொள்ள துணை அவசியம். துணை என்பது கடைசிவரை வர வேண்டும். பாதியில் விட்டு விட்டு போவது அல்ல. எனவே கணவனையோ மனைவியையோ வாழ்கை துணை என்றனர் . அபிராமி ,  எப்போதும் என் கிட்டவே இரு. எனக்குத் துணையாய் இரு. 

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

என்பார் அருணகிரி.

தொழும் தெய்வமும் = துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் நீ தான். 

பெற்ற தாயும் = எனை ஈன்ற தாயும் நீ தான். 

சுருதிகளின் = வேதங்களின் 
 
பணையும் = பணை  என்ற சொல்லுக்கு சிறப்பு, உயர்வு, எழுச்சி, பெருமை என்று பல பொருள் உண்டு. வேதங்களின் சாரமாக இருப்பவள், சிறப்பாக இருப்பவள், வேதங்கள் பெருமை படுத்தும் பொருளாக இருப்பவள் அபிராமி. 


கொழுந்தும் = வேதங்களில் இருந்து வெளிவரும் அர்த்தம், உண்மையாக இருப்பவள் அபிராமி. மரத்தில் இருந்து கொழுந்து வருவது போல. "அச்சுதா அமரர் ஏறே, ஆயர் தம் கொழுந்தே"  என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் கூறியது போல. 

பதிகொண்ட வேரும்  = கொழுந்து என்றால் வேர் வேறு ஏதோ என்று நினைக்கக் கூடாது. வேதம் என்ற மரத்தின் வெறும் அவள் தான், அது தரும் சாரமும் அவள் தான், அதில் துளிர்க்கும் தளிரும் அவள்தான். 


பனி மலர்ப்பூங் = குளிர்ந்த மலர்களை 

கணையும் = கொண்ட கணை . கணை என்றால் அம்பு. 

கருப்புச் சிலையும் = கரும்பு வில் 

மென் பாசாங்குசமும் = மென்மையான பாசக் கயிறும், அங்குசமும் 

கையில் அணையும் = கையில் எப்போதும் கொண்டு இருக்கும் 
 
திரிபுர சுந்தரி = அனைத்து உலகங்களிலும் அழகானவள்  

ஆவது அறிந்தனமே = நீ தான் என்று அறிவோம். 

அது என்ன மலர் அம்பு, கரும்பு வில், பாசக் கயறு, அங்குசம் ? 

கரும்பு வில்லும் மலர் அம்பும் மன்மதனின் ஆயுதங்கள். அது மோகத்தை, காமத்தை, அன்பை தோற்றுவித்து  உயிர்களின் படைப்புக்கு வழி வகுப்பது. எல்லா உயிர்களின் தோற்றமாய், தோற்றத்திற்கு காரணமாய் அவள் இருக்கிறாள். அவள் காமத்தை ஆட்சி செய்பவள். காமாட்சி. 
 

மென் பாசக் கயறு: குழந்தைக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்க்கும் அதற்காக எந்த தாயும் அளவு இல்லாமல் இனிப்பை குழந்தைகளுக்குத் தருவது இல்லை போதும், அப்புறம் நாளைக்கு என்று எடுத்து உள்ளே வைத்து விடுவாள். கணவனுக்கு எண்ணெய்  பலகாரம் பிடிக்கும். ஆனால் ஏற்கனவே கொழுப்பு அதிகமாக இருக்கிறது. "போதுங்க...ரொம்ப சாப்பிடாதிங்க...இந்த ஒண்ணு தான் ... சரியா " என்று அவர்களின் ஆசைகளை கட்டு படுத்துபவள் அவள். ஆசைகளுக்கு கடிவாளம் போட கையில் மென்மையான பாசக் கயறு. 

அங்குசம்: தவறு செய்தால் தண்டிக்க குழந்தைகள் தவறான வழியில் சென்றால், தண்டித்து, திருத்துபவளும்  அவளே . அதற்க்கு அங்குசம். 

அவள் தாயாக இருக்கிறாள். வாழ்க்கை துணையாக இருக்கிறாள். தொழும் தெய்வமாக இருக்கிறாள். 

வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க ஆசையையும், காமத்தையும் மோகத்தையும் தருகிறாள் 

அது எல்லை மீறி போகாமல் அளவோடு இருக்க, அதை கட்டுப் படுத்தி நம் வாழ்வை நெறிப் படுத்துகிறாள். 

இன்பத்தை மட்டும் அல்ல, ஞானத்தையும் தருகிறாள். அவளே வேதமாகவும் வேதத்தின் சாரமாகவும், அதன் பலனாகவும் இருக்கிறாள். 

இத்தனைக்கும் மேலாக ரொம்ப அழகா இருக்கா.

அபிராமி...அபிராமி...அபிராமி....


 


Thursday, February 7, 2013

திருக்கடை காப்பு - சிறு நுண் துளி சிதற


திருக்கடை காப்பு - சிறு நுண் துளி சிதற 


அது ஒரு சின்ன அழகிய கிராமம். ஊரைச் சுற்றி மலைகள். குளு  குளு  என்று எப்போதும் இருக்கும். மெல்லிய தென்றல் உயிர் உரசிப் போகும்.

ஊரைச் சுற்றி நிறைய மா மரங்கள். மா மரங்களில் குரங்குகள் ஜாலியாக குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருகின்றன. கிளைக்கு கிளை தாவம் போது அந்த கிளைகள் படாரென்று விடுபடுகின்றன அப்படி விடுபட்ட கிளைகள் மேகத்தில் சென்று மோதுகின்றன. அப்படி மோதும் போது, அந்த மேகத்தில் இருந்து நீர் துளிகள் சிதறுகின்றன. அப்படை சிதறிய நீர்த் துளிகளை மழை என்று நினைத்து அங்கிருந்த மான்கள் மரத்தடியில் சென்று ஒதுங்குகின்றன.

அப்படிப்பட்ட அழகிய ஊர் திருவண்ணாமலை.

திருவாரூரில் பிறக்க முக்தி
சிதம்பரத்தில் இருக்க முக்தி
காசியில் இறக்க முக்தி
திருவண்ணாமலையை   நினைக்க முக்தி

என்று சொல்லுவார்கள்.

அங்கே போகக் கூட வேண்டாம்....அதை நினைத்தாலே முக்தி தான்

அங்கு உறையும் அண்ணாமலையாரின் திருவடிகளை நினைத்தாலே பழைய வினைகள் எல்லாம் அற்றுப் போகும். நினைக்க முக்தி தரும் திருத்தலம்.

ஞான சம்மந்தரின் பாடல் 


தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பொருள்

Wednesday, February 6, 2013

திருவாசகம் - கணக்கில்லா திருக்கோலம்


திருவாசகம் - கணக்கில்லா திருக்கோலம் 



திருப்பெருந்துறையிலே குருவாய் வந்து மாணிக்க வாசகரை ஆண்டு கொண்டார் சிவ பெருமான்.

திரு கழுக்குன்றிலே கணக்கிலா வடிவங்கள் காட்டினான் என்று அவரே சொல்கிறார்


தமிழ் தாத்தா உ வே சாமிநாதையர் இறக்கும் தருவாயில் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை பாடும் படி சொல்லக் கேட்டாராம்..அந்தப் பாடலை கேட்ட பின் அவர் உயிர் பிரிந்தது என்று நான் சொல்லக் கேட்டு  இருக்கிறேன்.

அது இந்தப் பாடல்.....



பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

சீர் பிரித்த பின்

பிணக்கிலாத பெருந்துறை பெருமான் 
உன் நாமங்கள் பேசுவார்க்கு 
இணக்கிலாத ஓர் இன்பமே வரும் 
துன்பமே துடைத்து எம்பிரான் 
உணக்கிலாததோர் வித்து மேல் விளையாமல் 
என் வினை ஒத்த பின் 
கணக்கிலா திருக்கோலம் நீ வந்து 
காட்டினாய் கழுக்குன்றிலே 






பொருள்




பிணக்கி லாத = பிணக்குதல் என்றால் கட்டுதல் என்று பொருள். எதனோடும் பிணைப்பு இல்லாத, உயர்ந்தவர், தாழ்ந்தவர் , பணக்காரன், ஏழை என்று யாரையும் பேதம் பார்க்காமல் எல்லோரையும் காக்கும்

பெருந் துறைப் பெருமான் = திருப்பெருந்துறை என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் பெருமான்

உன் நாமங்கள் = உன்னுடைய திரு நாமங்களை


 பேசுவார்க்கு = பேசுபவர்களுக்கு

இணக்கு இல்லாததோர் = இணையே இல்லாத

இன்ப மேவரும் = இன்பமே வரும்

துன்பமே துடைத்து = துன்பத்தை துடைத்து


தெம்பிரான் = எம்பிரான்

உணக்கி லாததோர் = உலராத

வித்து = விதை

மேல்விளையாமல் = மேல் விளையாமல்

என்வினை = என்னுடைய பழைய வினைகள்

ஒத்தபின் = தீர்ந்த பின்

கணக்கி லாத் = கணக்கிலாத , எண்ணற்ற

திருக் கோலம் = திருக்கோலங்களை

 நீ வந்து காட்டி னாய் = நீயே வந்து காட்டினாய்

கழுக்குன்றிலே = திருகழுக்குன்றிலே


ஒரு விதை மீண்டும் முளைக்க வேண்டுமானால் அது முதலில் உலர வேண்டும். உலர்ந்த விதைதான் மீண்டும் முளைக்கும். 

என்னுடைய வினைகள் என்னை மீண்டும் பற்றாமல், நான் மீண்டும் வந்து பிறவாமல் என்னை ஆண்டு கொண்டாய் என்று அன்பால் உருகுகிறார் மாணிக்க வாசகர்.

திருவாசகத்தில் குரு தரிசனம் என்ற பகுதியில் உள்ள பத்து பாடல்களில் இது முதலாவது பாடல் 

அதில் உள்ள சில பாடல்கள் நெஞ்சை உருக்குபவை...பின்னொரு ப்ளாகில் அவற்றை பற்றியும் சிந்திப்போம் 

அவன் அருள் மாணிக்க வாசகரின் வினை மேல் சென்று முளைக்காமல் தடுத்து ஆட்கொண்டது...அந்த திருவருள் உங்களுக்கும் சித்திக்கட்டும் 





இராமாயணம் - இசையினும் இனிய சொல்லாள்


இராமாயணம் - இசையினும் இனிய சொல்லாள் 



இராமாயணம் வெறும் ஒரு கதை சொல்லும் காப்பியம் மட்டும் அல்ல.

அது வழி நெடுக வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விஷயங்களை தருகிறது

வாழ்கை நெறி, உண்பது, உறங்குவது, (ஆம், எப்படி படுத்து உறங்க வேண்டும் என்று கூட சொல்கிறது ), அரசியல், உளவியல் (psychology ) என்று எத்தனையோ நல்ல விஷயங்களை தருகிறது.

என்ன கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.


ஒரு பிரச்சனை என்று வந்து விட்டால் அதை எப்படி சரி செய்து விடை காணுவது ?


பிரச்சனையில் சம்பந்தப் பட்டவர்கள் பேசி, விவாதித்து ஒரு நல்ல தீர்வு காணலாம்.

அந்த பிரச்சனை கணவன் மனைவிக்கு இடையே இருக்கலாம், அலுவகலத்தில் அதிகாரிகளுடனோ, அல்லது அங்கு வேலை பார்ப்பவர்களுடனோ இருக்கலாம்.

எங்கு எப்படி பிரச்சனை இருந்தாலும் பேசித்தான் தீர்க்க வேண்டி இருக்கிறது

பொதுவாக பிரச்சனைகளை பேசும் போது  பேச்சு சூடு அடைந்து, இரு தரப்பும் கோபம் அடைந்து, வார்த்தைகள் தடித்து, பிரச்சனை முற்றிப் போய்  விடுகிறது.

 முதலில் இருந்த பிரச்சனை போக, இப்போது பேசிய பேச்சில் வந்து விழுந்த வார்த்தைகளும் சேர்ந்து பிரச்சனையையை இன்னும் பெரிதாக்கி விடுகிறது.


பேச்சில் இனிமை வேண்டும். இனிமையாகப் பேசினால் எந்த பிரச்சனையும் சுமுகமாக தீரும். எதிரில் இருப்பவரின் மனம் அறிந்து பேச வேண்டும். அவர்கள் மனம் புண் படாதபடி பேச வேண்டும்.


கார்காலம் முடிந்து விட்டது சீதையை தேட ஆள் அனுப்புவதாக சொன்ன சுக்ரீவன் பூவியல் நறவம் (தண்ணி அடித்துவிட்டு) ஜாலியாக இருக்கிறான். 

இராமன் கோவித்து இலக்குவனை அனுப்புகிறான். 

கோபத்தோடு இலக்குவன் வருகிறான் 

அவனை எப்படி சமாளிப்பது ? அனுமன் தாரையை அவன் முன் அனுப்புகிறான். 

தாரை பேசுகிறாள். எப்படி பேச வேண்டும் என்பதை அவளிடம் பார்த்து படிக்க வேண்டும். 

"ஐயா, நீ கோபத்தோடு வருவதை பார்த்து வானர சேனைகள் பயந்து இருக்கின்றன. உன் உள்ளத்தில் ஏதோ கோபம் இருக்கிறது ஆனால் என்ன என்று தெரியவில்லை...அது என்ன என்று தயவு செய்து சொல்லு....ஆமா , நீ இராமனை விட்டு எப்போதும் பிரியவே மாட்டியே , எப்படி அவனை விட்டு இங்கு வந்தாய் " என்று கேட்டாள் - இசையினும் இனிய சொல்லாள்.

அவள் பேசியது இசையை விட இனிமையாக இருந்ததாம். அப்படி இனிமையாக பேசினால் யாருக்கு தான் கோவம் தணியாது ?

முதலில் அவனை உயர்த்தி பேசுகிறாள் - உன் கோபத்தை பார்த்து சேனை வீரர்கள் பயந்து போய்  இருக்கிறார்கள் நீ பெரிய ஆள் என்ற அர்த்தம் 

நீ சொல்லாமலேயே கோபப் படுகிறாய் - உன் கோபத்திற்கு காரணம் தெரியவில்லை. 

அப்புறம், நீ இராமனை விட்டு பிரியவே மாட்டியே எப்படி வந்த என்று கேட்பதின் மூலம், அவன் மனதின்  மென்மையான பாகத்தை தொடுகிறாள் இராமனின் பேரை சொன்னவுடன் இலக்குவன் மனம் உருகுகிறது. அது மட்டும் அல்ல, நீ சீக்கிரம் அங்க போ என்ற அர்த்தம் தொனிக்கிறது. 

பாடல் 
  
'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவுறும் சேனை, வீர!

செய்திதான் உணர்கிலாது; திருவுளம் தெரித்தி' என்றாள்;
'ஐய! நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்;
எய்தியது என்னை?' என்றாள், இசையினும் இனிய சொல்லாள். 


பொருள் 



Tuesday, February 5, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் யார் உன்னைப் புகழ


இராமானுஜர் நூற்றந்தாதி - நான் யார் உன்னைப் புகழ 

உணர்ச்சி வெள்ளம் பொங்கி வரும்போது வார்த்தைகள் பயனற்று போய்  விடும். 

எவ்வளவோ பேச வேண்டும் என்று நாள் கணக்காக திட்டமிட்டு போவான்...காதலியை பார்த்தவுடன் வார்த்தை ஒன்றும் வெளியே வராது ... ஏன் ? உணர்ச்சி மிகுதியால் வார்த்தை தடுமாறும், நாக்கு குழறும்...

கண்ணோடு கண்ணினை நோக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இல என்பார் வள்ளுவர். சொற்களால் ஒரு பயனும் இல்லை. 

இராமானுஜரை புகழ்ந்து பாட வேண்டும் என்று நினைக்கிறார். என்ன பாடினாலும் திருப்தி இல்லை. 

மனதில் உள்ள அத்தனை பக்தியும், அன்பும் பாடலில் வர வில்லை. மத்தவங்க எல்லாம் எவ்வளவு அழகாகப் பாடி இருக்கிறார்கள் . .... என்    பாட்டும் இருக்கிறதே ...கத்து குட்டி எழுதின பாட்டு மாதிரி என்று தன்  பாடல்களைப் பற்றி தானே நொந்து கொள்கிறார்...

வார்த்தைகளுக்கு எட்டாத அன்பு, மரியாதை பக்தி ....

பாடல் 


இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே


பொருள்