இராமாயணம் - பிழை காண்பது
வெளியே போக வேண்டும் என்று மனைவி சொல்லி இருப்பாள். கணவன் வேண்டாம் என்று சொல்லி இருப்பான். பின் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு பின், சரி வா என்று கணவன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான்.
போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்..பணப் பை (purse ) தொலைந்து இருக்கலாம், கல் தடுக்கி கீழே விழுந்து அடி பட்டிருக்கலாம்...
உடனே கணவன் மனைவியை பார்த்து " எல்லாம் உன்னால் தான்...நான் அப்பவே சொன்னேன்...பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று...கேட்டாத் தானே" மனைவி செய்யாத தவறுக்கு அவளை கணவன் திட்டுவதை பார்த்து இருக்கிறோம்.
இந்த மாதிரி சம்பவங்கள் வீட்டில் மட்டும் அல்ல, அலுவலகத்தில் கூட நடக்கலாம். ஏதோ ஒரு முடிவு எடுத்து, அது தவறாகப் போனால் யாரையாவது பிடித்து பலி கடாவாக ஆக்கி விடுவார்கள்.
நடந்த தவறுக்கு யாருமே காரணமாய் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் வரும் கோபத்தில் யாரையாவது குறை கூறுவது என்பது மனித இயல்பு.
இராமனின் மணி முடியை பறித்து அவனை காட்டுக்கு போகச் சொல்லி விட்டார்கள் .
இலக்குவனுக்கு அடங்காத கோபம். விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி என்று புறப்பட்டான்.
அவனை தடுத்து, இராமன் சமாதனம் கூறுகிறான்.
தவறு நடந்தது என்றே கொண்டாலும் அதற்க்கு யாரும் காரணம் இல்லை
நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றம் அன்று.. மழை பொழியாத இயற்கையின் குற்றம்.
நான் கானகம் போவதற்கு காரணம் தசரதன் காரணம் இல்லை, கைகேயி காரணம் இல்லை, பரதன் காரணம் இல்லை...விதியின் பிழை என்று கூறுகிறான்.
நாமாக இருந்தால் தசரதனை குறை கூறி இருப்போம், அல்லது கைகேயியை அல்லது பரதனை குறை கூறி இருப்போம்.. அவர்கள் மேல் கோபம் கொண்டு இருப்போம்.. கோபம் வெறுப்பை தந்திருக்கும்
இராமன் அவர்கள் யாருமே தவறு செய்யவில்லை. எல்லாம் விதிப் பயன் என்று நினைத்தான். எனவே அவர்கள் மேல் அவனுக்கு கோபம் வரவில்லை.
பாடல்
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
பொருள்