Thursday, October 31, 2013

இராமாயணம் - நீ என் பிழைதனை ?

இராமாயணம் - நீ என் பிழைதனை ?


பிள்ளைகள் அம்மாவிடம் வந்து அப்பா திட்டினார், அப்பா அடித்தார் என்று குற்றச் சாட்டு கூறினால் பெரும்பாலான அம்மாக்கள் என்ன ஏது என்று கேட்காமல் அப்பாவை திட்டத் தொடங்கி  விடுவார்கள்.

அப்பா என்று இல்லை, பிள்ளை யாரைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டு வந்தாலும், உடனே அவன் யார் பேரில் குற்றம் சொல்கிறானோ அவனை வைய வேண்டியது.

என்னை காடு போ என்று அரசன் சொன்னான் என்று இராமன் சொன்னவுடன் கோசலை வருந்தினாள்.

ஆனால் உடனே இராமனிடம் கேட்டாள் "உன் மேல் அன்பு கொண்ட அரசன் உன்னை கானகம் போகச் சொல்லும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய் " என்று.

இராமன் தவறு செய்திருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும், அவள் கேட்கிறாள்.

உணர்ச்சி வசப் படக் கூடாது. வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் "நீ என்ன செய்தாய் " என்று கேட்கிறாள்.

கோசலையின் வருத்தம் பற்றி கம்பன் கூறுகிறான்

ஏழை ஒருவன் கொஞ்சம் பொன் பெற்று பின் அதை இழந்தால் எப்படி வருந்துவானோ அப்படி வருந்தினாள் என்று கூறுவான்.

பிள்ளை இல்லாமல் பல காலம் இருந்து பெற்ற பிள்ளை, இப்போது இழக்கப் போகிறாள்.

வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்....ஏழைக்கு லாட்டரியில் பாத்து கோடி  பரிசு விழுந்தது. தன்  வறுமை எல்லாம் போய் விட்டது. இனி வாழ்வில் வசந்தம் தான் என்று இருந்தவனுக்கு , பரிசுச் சீட்டு தொலைந்து போனால் எப்படி இருக்கும்  ? அப்படி வருந்தினாள் கோசலை.


பாடல்

‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை? ‘என்று நின்று ஏங்குமால்;
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்கப் பொதிந்தனர் போலவே.


பொருள் 

Tuesday, October 29, 2013

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்

கம்ப இராமாயணம் - வாசகம் என்னும் அனல்


அரசன் என்னை கானகம் போகச் சொன்னான் என்று இராமன் சொன்ன அந்த வாசகம் தீ போல் கோசலையின் காதில் நுழைந்தது. தீயை தொட வேண்டும் என்று அல்ல..அருகில் சென்றாலே  சுடும்.அது போல அந்த வாசகம் அவள் காதைத் தொடவில்லை...அதற்கு முன்பே சுட்டது என்றான் கம்பன்.


பாடல்

ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்
வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ.


பொருள்


Monday, October 28, 2013

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி

இராமாயணம் - ஈண்டு உரைத்த பணி


என்னை நல்ல நெறியில் செலுத்த சக்கரவர்த்தி சொன்ன பணி ஒன்று உண்டு என்று இராமன் கோசலையிடம் கூறினான்.

மெல்ல மெல்ல தான் கானகம் போக வேண்டும் என்ற செய்தியை சொல்ல வருகிறான்.

"பெரிய கானகத்தில் உள்ள பெரிய தவம் செய்யும் முனிவர்களோடு பதினாலு வருடம் இருந்துவிட்டு வர வேண்டும்" என்று கூறினார் என்று கூறினான்.

பாடல்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு,
'"ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை
மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். 

பொருள்

"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு = இன்று உரைத்த வேலை என்ன என்று கேட்ட கோசலையிடம்

ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் = பதினாலு வருடம்

அகல் கானிடை = அகன்ற கானகத்தில், விலகி நிற்கும் கானகத்தில்

மாண்ட = மாண்புள்ள 

மாதவத் தோருடன் = மா தவம் செய்தோருடன்

வைகிப் பின் = உடன் இருந்து பின்

மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். = மீண்டும் நீ வர வேண்டும் என்று கூறினான் என்றான்.

முனிவர்களை சென்று பார்த்து விட்டு வரும்படி சொன்னான் என்று மிக மிக   எளிதாக  சொல்கிறான்.

பிரச்சனைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இராமன் பாடம் நடத்துகிறான்.

கைகேயி சொன்னது

"தாழிரும் சடைகள் தாங்கி, தாங்கரும் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நணுகி, புண்ணிய துறைகள் ஆடி" என்று.

இராமன் சொல்கிறான். முனிவர்களை பார்த்துவிட்டு வரும்படி அரசன் சொன்னான் என்கிறான்.

துன்பங்களை துச்சமாக எண்ணிப் பாருங்கள். அவை பெரிதாக இருக்காது.

சின்ன விஷயத்தை கூட பெரிதாக பெரிதாக ஊதி பெரிதாக்கி கவலைப்  படுபவர்களும்  இருகிறார்கள். அவர்கள் வாழ்கையை நரகமாக்கி கொள்பவர்கள்.

காலா, என் காலருகில் வாடா என்று பாரதி சொன்னது  போல...

மரணப் பிரமாதம் நமக்கு இல்லை என்றார் அருணகிரி

துன்பங்களை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது அதன் வேகம்....


இராமனிடம் இருந்து படிப்போம். .



திருவாசகம் - கண்டேன் கண்டேன்

திருவாசகம் - கண்டேன் கண்டேன்

இறைவன் இருக்கிறானா இல்லையா என்ற சர்ச்சை ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. காணதவர்கள் , இறைவன் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இறைவனை கண்டவர்கள் , கண்டேன் கண்டேன் என்று சொல்கிறார்கள்.

மாணிக்க வாசகர் தான் இறைனை கண்டதாக வாக்கு மூலம் தருகிறார் - கண்ட பத்து என்ற பத்து பாடல்களில்.

நமக்கு வரும் மூன்று பெரிய துன்பங்கள் எவை ?

பிணி, மூப்பு, சாக்காடு - இந்த மூன்றிலும் இருந்து யாரும் தப்ப முடியாது. மூப்பு வந்தே தீரும். சாக்காடும் வந்தே தீரும். இடையில் பிணி வரும் போகும்.

இந்த மூன்றையும் தவிர மனிதனுக்கு துன்பம் தருவது - ஆசை அல்லது பற்று.

உறவுகள் மேல் , பொருள்கள் மேல், அனுபவங்கள் மேல் கொள்ளும் பற்று.

மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த நான்கையும் மாற்றி தனக்கு காட்சி தந்ததாகச் சொல்கிறார்.

பாடல்



பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.

பொருள்


Sunday, October 27, 2013

குறுந்தொகை - காமர் மாந்தி

குறுந்தொகை - காமர் மாந்தி 


இது நடந்ததா, நடக்குமா இல்லை வெறும் கற்பனையா என்று தெரியாது. இருந்தாலும் மனதைத் தொடும் பாடல்.

தோழி சொல்கிறாள் தலைவனிடம்

கரிய தலையை கொண்ட ஆண்  குரங்கு இறந்த  பின்,அதன் ஜோடி பெண் குரங்கு அதன் குட்டிகளை தன் உறவினர்களிடம் கொடுத்து விட்டு மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து உயிரை  மாய்த்துக் கொள்ளும் மலைகளை கொண்ட நாட்டைச் சேர்ந்தவனே, இனிமேல் இரவு நேரத்தில் தலைவியை காண வராதே...இரவில், மலை பாங்கான வழியில் உனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று எங்களுக்கு வருத்தமாய் இருக்கிறது.....

பாடல்

கருங்கண் தாக்கலை பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

பொருள்

கருங்கண் = கரிய கண்கள் 

தா(க்) = தாவும்

கலை =  ஆண் குரங்கு

பெரும் பிறிது = பெரிய பிரிவு , அதாவது மரணம்

உற்றனக் = அடைந்ததை

கைம்மை = விதவையான

உய்யாக் = வாழும் வழி தெரியாத, வாழ விருப்பம் இல்லாத

காமர் மந்தி = காதல் கொண்ட பெண் குரங்கு

கல்லா = வயதாகத

வன் பறழ் = சுட்டித் தனம் நிறைந்த குட்டியை

கிளை முதல் சேர்த்தி = உறவினர்களிடம் சேர்த்துவிட்டு

ஓங்கு = உயர்ந்த

வரை = மலை

அடுக்கத்துப் பாய்ந்து = பள்ளத்தில் பாய்ந்து

உயிர் செகுக்கும் = உயிரை விடும்

சாரல் நாட = அந்த மாதிரி உள்ள நாட்டைச் சேர்ந்தவனே

நடுநாள் = நடு இரவில்

வாரல் = நீ வராதே 

வாழியோ = நீ வாழ்க 

வருந்துதும் யாமே. = நாங்கள் வருந்துவோம்

குரங்குக்கு அவ்வளவு காதல், அவ்வளவு பொறுப்பு....அப்படி என்றால் அந்த ஊர் மக்களைப் பற்றி  என்ன சொல்லுவது....




இராமாயணம் - நாயகன் ஏவியது

இராமாயணம் - நாயகன் ஏவியது 


அரசை பரதனுக்கு கொடுத்து நீயும் உன் தம்பியும் ஒன்றாக நீண்ட நாள் வாழுங்கள் என்று கோசலை சொல்லி விட்டாள் .

அடுத்ததாக , தசரதன் கானகம் போகச் சொன்னான் என்று சொல்ல வேண்டும்.

அதை எப்படி சொல்கிறான் என்று பாப்போம்.

அதற்க்கு முன்னால்,  நீங்கள் இராமன் இடத்தில் இருந்தால் இந்த செய்தியை எப்படி சொல்லி இருப்பீர்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

"அந்தக் கிழவன், அந்த சிங்காரி கைகேயி பேச்சை கேட்டு என்னை காடு போ என்று சொல்கிறான் " என்று கூட நாம் சொல்லலாம்.

அரசு போனது மட்டும் அல்ல, காடும் போக வேண்டும் என்றால் எப்படி இருக்கும் ?

அரசை பரதனுக்கு கொடு என்று கோசலை சொன்னவுடன் இராமன் மகிழ்ந்தான் என்கிறான்  கம்பன். எங்கே தாய் அரசை பரதனுக்கு தருவதற்கு தடை சொல்லி விடுவாளோ என்று நினைத்திருக்கலாம், அல்லது இந்த செய்தியை கேட்டு கோசலை வருந்துவாளோ என்று நினைத்திருக்கலாம்....அப்படி இல்லாமல் கோசலை அரசை பரதனுக்கு கொடு என்று சொன்னவுடன் அதைக் கேட்டு மகிழ்ந்து "சக்கரவர்த்தி, என்னை நல்ல வழியில் செலுத்துவதற்கு இன்னும் ஒன்று சொன்னான் " என்று அடுத்த வரத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான்.

பாடல்

தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
‘நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஒர் பணி’ என்று இயம்பினான்.


பொருள்


தேவாரம் - கொடுமைபல செய்தன நான்அறியேன்

தேவாரம் - கொடுமைபல செய்தன நான்அறியேன்


நமக்கு துன்பம் வரும்போது எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று நாம் வருந்துகிறோம். நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கு ஏன் இந்த துன்பம், இந்த வருத்தம் வந்தது என்று கவலைப் படுகிறோம்.


ஒரு செயலை செய்தால் அதற்கு ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவு நாம் எதிர் பார்த்ததாய் இருக்கலாம் அல்லது வேறு மாதிரி கூட அமையலாம். ஆனால் வினைக்கு விளைவு என்று ஒன்று உண்டு.

அதையே மாற்றி சிந்தித்தால் ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு வினை இருக்க வேண்டும்.

இன்று ஒரு துன்பம் நமக்கு இருக்கிறது என்றால் அதற்கு நாம் ஏதோ செய்திருக்க வேண்டும்.  அதன் விளைவு தான் இந்தத் துன்பம் என்று அறிய வேண்டும்.

நமக்கு நினைவு தெரிந்து நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்திருக்க மாட்டோம். அல்லது நாம் செய்தது சரியா தவறா என்று கூட நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

துன்பம் என்று வந்து விட்டால் மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு திரியக் கூடாது. நாம் செய்த வல் வினை என்று இருக்க வேண்டும்.

நாவுக்கரசருக்கு பொறுக்க முடியாத வயிற்று வலி வந்தது. என்னனவோ செய்து பார்த்தார் .....வலி குறைவதாய் இல்லை.

இறைவனிடம் முறையிடுகிறார்.

இந்த வலி வந்ததற்கு காரணம் நான் ஏதோ கொடுமை செய்திருக்க வேண்டும். என்ன கொடுமை என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் உன் திருவடிகளையே வணங்கி வந்திருக்கிறேன். அப்படி இருக்க எனக்கு ஏன் இந்த பொறுக்க முடியாத வலி ? இந்த வலியை நீக்கி என்னை காக்க வேண்டும்

பாடல்

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.


பொருள்


கூற்றாயின வாறு = கூற்று ஆயினவாறு. கூற்றுவன் என்றால் எமன். உயிரையும் உடலையும் கூறு செய்வதால் அவன் கூற்றுவன். எனக்கு வந்த இந்த நோய் எமனைப் போல என்னை வருத்துகிறது. வலி உயிர் போகிறது.

விலக்ககிலீர் = விலக்கி அகற்றி அருளவில்லை

கொடுமைபல செய்தன = நான் பல கொடுமைகளை செய்திருக்கலாம்

நான்அறியேன் = அவை என்ன கொடுமைகள் என்று நான் அறிய மாட்டேன்

ஏற்றாய் = எருதின் மேல் அமர்ந்தவனே

அடிக்கே = உன் திருவடிகளுக்கே

இரவும் பகலும் = இரவும் பகலும்

பிரியாது = இடை விடாமல்

வணங்குவன் எப்பொழுதும் = எப்போதும் வணங்குவேன்

தோற்றாது என் வயிற்றின் = என் வயிற்றில் தோன்றிய

அகம்படியே = உள்ளும் புறமும்

குடரோடு = குடலோடு

துடக்கி = துடக்கி என்றால் தீட்டு. பெண்களுக்கு மாதவிடாய் வரும்போது அதை தீட்டு என்று சொல்லுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு வற்றில் ஒரு வலி வரும். துடக்கி என்றால் அந்த சமயத்தில் வரும் வலி போல என்று கொள்ளலாம். ஒரு ஆணால் அறிந்து கொள்ள முடியாத வலி அது. நாவுக்கரசர் சொல்கிறார்.

முடக்கியிட = என்னை முடக்கிப் போட

ஆற்றேன்  அடி யேன் = என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை

அதிகைக் = திரு வதிகை என்ற ஊரில்

கெடில = கெடில நதிக் கரையில்  உள்ள

வீரட்டா னத்துறை = எட்டு வீரட்டானத் துறைகளில் ஒன்றான அந்த ஊரில் உறையும் 
 
அம்மானே = அம்மானே