Sunday, September 21, 2014

விவேக சிந்தாமணி - அமுதம் என்று அளிக்கலாமே

விவேக சிந்தாமணி - அமுதம் என்று அளிக்கலாமே 


அமுதம் வேண்டும் என்று தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு கடைந்தார்கள்.

எவ்வளவு பெரிய வேலை அது.

அமுதத்திற்கு ஏன் இவ்வளவு அலைய வேண்டும் ?

என் காதலியின் வாயில் ஊறும் நீரை விடவா அந்த அமுதம் சிறந்தது ?

பாடல்

வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி 
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல் 
கண்டு சர்க்கரையோ தேனோ கனியடு கலந்த பாகோ 
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே! 

பொருள்

வண்டு மொய்க்கும் குழல். காரணம் அதில் உள்ள பூக்கள். அப்போதுதான் பறித்த பூக்கள். வண்டுகளுக்குத் தெரியாது அது செடியில் இருக்கிறதா அல்லது அவள் தலையில் இருக்கிறதா என்று. அத்தனையும் புத்தம் புதிய பூக்கள். இன்னும் அதில் தேன் வடிந்து கொண்டிருக்கிறது. வண்டுகள் மொய்க்கின்றன. அப்படி என்றால் அதில் இருந்து வரும் மணம் எப்படி இருக்கும் .....




கெண்டையோடு ஒத்த கண்ணாள்

கெண்டை மீனைப் போன்ற கண்கள். மீன் போல் நீரில் தவழும் கண்கள். மீன் போல் அங்கும் இங்கும் அலையும் கண்கள்.


கிளிமொழி = கிளி போன்ற குரல்


வாயின் ஊறல் = வாயில் ஊற்றெடுக்கும் அமுதம்

கண்டு = அதைக் கண்டு

சர்க்கரையோ  = சர்க்கரையோ

தேனோ = தேனோ

கனியடு கலந்த பாகோ = கனிகளில் இருந்து எடுக்கப்பட்ட பாகோ

அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே! = இதையே அமுதம் என்று அளிக்கலாமே



சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 1

சிவபுராணம் - அன்பருக்கு அன்பனே - பாகம் 1 


பாடல்

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்

அன்பருக்கு அன்பனே = உன்னுடைய அன்பர்களுக்கு அன்பானவனே

யாவையுமாய் = அனைத்துமாய்

அல்லையுமாம் = அவை அனைத்தும் இல்லாததுமாய்

சோதியனே = சோதி வடிவானவனே 

துன்இருளே = அடர்ந்த இருள் போன்றவனே

தோன்றாப் பெருமையனே = தோற்றம் என்று ஒன்று இல்லாதவனே

ஆதியனே = முதலானவனே

இறுதியானவனே  = நடுவானவனே

நடுவாகி = நடுவானவனே

அல்லானே = இவை அனைத்தும் இல்லாதவனே

ஈர்த்தென்னை = ஈர்த்து , கவர்ந்து என்னை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

எந்தை பெருமானே = என் தந்தை போன்றவனே,  பெரியவனே

கூர்த்த = கூர்மையான

மெஞ் ஞானத்தால் = மெய்யான ஞானத்தால்

கொண்டுணர்வார் தங்கருத்தின் = கொண்டு உணர்வார் தங்கள் கருத்தில்


வார்த்தைகளுக்கு பொருள் கண்டாகி விட்டது.

அதில் உள்ள உட் பொருளை பற்றி சிந்திப்போம்.

"அன்பருக்கு அன்பனே"

அன்பர்களுக்கு அன்பானவன்.

சரி, அன்பு இல்லாதவர்களுக்கு என்ன ஆனவன் என்ற கேள்வி எழும் அல்லவா ?

தன் மேல் அன்பு செலுத்துபவர்களிடம் அவன் அன்பு செலுத்துகிறான்; அவன் மேல் அன்பு செலுத்தாதவர்களிடம் அன்பு செலுத்த மாட்டான் என்றால் இது ஏதோ சாதாரண மனித குணம் போல அல்லவா இருக்கிறது.

ஒரு இறைவன் இப்படிச் செய்வானா ?

அந்த கேள்வி அப்படி இருக்கட்டும் ஒரு புறம்.

கற்கண்டு எப்படி இருக்கும் ?

இனிப்பாய் இருக்கும்.

அது இனிப்பாக இருக்க இரண்டு பொருள் வேண்டும். ஒன்று கற்கண்டு, இன்னொன்று அதை சுவைக்கும் நாக்கு.


நாக்கு இல்லாமல் கற்கண்டு இனிக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

அது போல, நாக்கு மட்டும் இருந்தால் போதாது...அதுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ள ஒருவனிடம் கற்கண்டை கொடுத்தால் அவனுக்கு எல்லாமே கசப்பாகத்தான் இருக்கும். வாய் கசக்கிறது என்று சொல்லுவான். எதை உண்டாலும் கசப்பாகத்தான் இருக்கும். பித்தம்.

அவனுக்கு கற்கண்டு கசந்தது கற்கண்டின் பிழையா? அது அவன் நாவின் பிழை.

இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்கு அவன் அன்பனாகத்தான் தெரிகிறான்.

இறைவன் இல்லை, அப்படி ஒன்று கிடையவே கிடையாது என்று சொல்பவர்களுக்கு  அவன் அன்பு தெரியாது. அது யார் பிழை ?

நீங்கள் இறைவன் அன்பு கொண்டால் அவன் அன்பு உங்களுக்குப் புரியும்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது

நாதன் நாமம் நமசிவாயவே

என்பார் திருஞானசம்பந்தர்.




Saturday, September 20, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 5

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 5



பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம்

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து"

நேசம் என்றால்  அன்பு.  

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது.

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார்.

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன்.

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர்.

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது.

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது.

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது.

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது.

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது.

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது.

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது.

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது.

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்

"அளவு இல்லாப் பெம்மானே " என்று.

 (மேலும் சிந்திப்போம் )
===============================பாகம் 3 ==================================

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!


ஓர்தல் என்றால் ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல் என்று பொருள்.


 மலையாளத்தில் "ஓர்மை" என்று ஒரு சொல் உண்டு. நினைவு , ஞாபகம் என்ற  அர்த்தத்தில்.

ஓராதார் உள்ளத்து - ஆராயாமல், சிந்திக்காமல் இருப்பவர்கள் உள்ளத்தில் ஒளிக்கும்  ஒளியானே.


அது என்ன ஒளிக்கும் ஒளி ?

ஒளியை, வெளிச்சத்தை யாராலும் ஒளித்து வைக்க முடியாது. அது எங்கும்  இருக்கிறது.

இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனதிலும் அவன் இருக்கிறான். ஆனால்  ஒளிந்து இருக்கிறான். வெளிப் படாமல் இருக்கிறான்.

எப்படி என்றால் ....

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் 
மறைய நின்றுளான் மாமணிச் சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று நாவுக்கரசர் கூறியது போல.

விறகினுள் தீயைப்  போலவும்,பாலினுள் நெய்யைப்  போலவும், மணியின் உள்ளே உள்ள   ஒளி போலவும் மறைந்து   .நிற்கிறான் .அவன்.

விறகை கடைந்தால் ஜோதி வெளிப் படும்.

தயிரைக் கடைந்தால் நெய் வெளிப்படும்

மணியை பட்டை தீட்டினால் ஒளி வெளிப்படும்

அது போல இறை சிந்தனை இருந்தால் இறைவன் வெளிப்படுவான்.

இங்கே சற்று நிறுத்தி ஆழமாக சிந்திப்போம்.


இறை சிந்தனை என்று தான்  கூறுகிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகமும் இறை சிந்தனை பற்றித்தான்.  இல்லை என்று சொல்பவனும் இறைவனை பற்றி சிந்திக்கிறான். இறைவன் யார்,  அவன் எப்படி இருக்க  முடியும்,நமக்கு ஒரு சாட்சியும் இல்லையே, அவன் இருக்கிறானா, இல்லையா என்று அவனும் சிந்திக்கிறான். அந்த சிந்தனையின் முடிவில் அவனுக்கும் அந்த இறை சக்தி வெளிப் படலாம். எனவே தான் சைவ சிந்தாந்தம் நாத்திகத்தையும் தன்னுள் கொண்டு இருக்கிறது.  இறைவன் இல்லை என்று சொல்லுபவனும் சைவ மதத்தைச் சார்ந்தவன் தான்.  

"நம்பாதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்று மணிவாசகர் சொல்லவில்லை.

நம்பச் சொல்லவில்லை. சிந்திக்கச் சொல்கிறார்.

அந்த இறை சக்தி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. சிலரிடம் மறைந்து கிடக்கிறது, சிலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது.

ஓராதார் உள்ளத்தும் அது இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது.

ஒரு அரிக்கேன் விளக்கு இருக்கிறது. உள்ளே சுடர் எரிகிறது. வெளியே உள்ள கண்ணாடில்   கரி படிந்து  இருக்கிறது. வெளிச்சம் வெளியே  தெரியாது.

கரியை சுத்தமாக துடைத்தால் வெளிச்சம் பளீரென்று வெளிப்படும்.

அந்த கரி தான்  ஆணவம்,கன்மம் மாயை என்ற அழுக்குகள் (மும்மலம்) என்று சொல்லுவார்கள்.

அழுக்கை நீக்கினால் ஜோதி சுடர் விட்டு வெளிச்சம் தரும்.

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே


இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் மிக மிக ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது சிவ புராணம்.

வாசித்துக் கொண்டே போவதற்கு அல்ல. நீண்ட சிந்தனைக்கு உகந்தது சிவ புராணம்.

மேலும் சிந்திப்போம்

--------------------------------\பாகம் 4/-----------------------------------------------------------------------------

நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

மனம் நெகிழ வேண்டும். மனம் நெகிழாதவர்களை "சரியான கல் நெஞ்சக் காரன்" என்று  சொல்லுவோம்.

இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால் மனம் இளகி மெத்தென்று இருக்க வேண்டும்.

கல்லின் மேல் பாதம் படியுமா ?

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர். மனமாகிய கல் நெகிழ்ந்து உருக வேண்டும்.


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

அவர்கள் மனம் கல் என்றால் நம் மனம் எல்லாம் இரும்பாக இருக்கும்.

உருகி என்றால் எவ்வளவு உருக வேண்டும் ? நீர் போல உருகி ஓட வேண்டும்.

இளகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றாகக் கலந்து  விடுவான்.

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

மனம்  உருகிய பின் சீவன் வேறு சிவன் வேறு அல்ல. நான் வேறு அவன் வேறு என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டு அல்லாடுகிறோம். மனம் உருகும்போது பிரிவினையும் உருகி  விடுகிறது.இரண்டும் ஒன்றாக கலந்து விடுகிறது.


(அடுத்த வரியை நாளை சிந்திப்போம்)

-------------------------------------------/பாகம் 5/------------------------------------------------------------------

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!


இன்பம்  சரி. அது எப்படி இறைவனுக்கு துன்பம் வரும் ? 


குழந்தைக்கு  உடம்பு சரி இல்லை என்றால் தாய் வருந்துவாள். தான் பத்தியம் இருப்பாள். இல்லாத கோவிலுக்கு எல்லாம் வேண்டிக்  கொள்வாள்.கண் விழித்து  வைத்தியம் பார்ப்பாள். அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லை. பிள்ளைக்கு  உடம்பு சரி இல்லை. 


 அதே பிள்ளை,   பள்ளியில் படிப்பில் அல்லது விளையாட்டில் முதலாவதாக  வந்தால்  அந்த தாய் மகிழ்வாள். அவள்  வரவில்லை.அவளுடைய பிள்ளை 
 வந்தது.

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்பார்  வள்ளுவர்.

பிள்ளைக்கு துன்பம் என்றால், அவள் துன்பப் படுகிறாள். 

பிள்ளைக்கு இன்பம் என்றால், அவன் இன்பம்  அடைகிறாள்.

இங்கே அவளுக்கென்று இன்பமும் துன்பமும் இல்லை. பிள்ளையின் இன்பமும், துன்பமும் அவளை பற்றிக்  கொள்கிறது.

ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளை  இருந்து,ஒன்றுக்கு உடல் நலம் இல்லை, இன்னொன்று  வகுப்பில் முதலாவதாக வந்து  இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

அவள்  வருந்துவாளா? மகிழ்வாளா ?

இரண்டும் தான். 

இறைவனுக்கு ஆயிரம்  பிள்ளைகள்.

சிலது  வருந்தும், சிலது மகிழும் எனவே இறைவன் 

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே. 

அவனுக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. 

பிள்ளைகளால் அவனுக்கு இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. 

மணிவாசகர் எவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார்....


இராமாயணம் - அங்கதன் தூது - அம்பு விடு தூது

இராமாயணம் - அங்கதன் தூது - அம்பு விடு தூது 


போருக்கு முன் தூது விடுவோம் என்று இராமன் சொன்ன பின், அவனுடன் இருந்தவர்கள் அவர்கள் எண்ணத்தை கூறுகிறார்கள்.

வீடணன் "அது மிக அழகானது"  என்றான்.

சுக்ரீவன் "அரசர்களுக்கு ஏற்றது" என்றான்

இலக்குவன் "அவனிடம் அனுப்ப வேண்டியது சொல் அல்ல, அம்புகள்" என்றான்.

பாடல்


அரக்கர் கோன் அதனைக் கேட்டான், 'அழகிற்றே 
ஆகும்' என்றான்;

குரக்கினத்து இறைவன் நின்றான், 'கொற்றவர்க்கு
உற்றது' என்றான்;

'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன்; 'இனி,  
நாம் அம்பு


துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ?
என்னச் சொன்னான்.

பொருள்

அரக்கர் கோன் = வீடணன்

அதனைக் கேட்டான் = இராமன் தூது அனுப்புவோம் என்ற சொல்லைக் கேட்டான்

'அழகிற்றே ஆகும்' என்றான் = அழகானது என்றான்

குரக்கினத்து இறைவன்  = குரங்கின தலைவன்

நின்றான் = எழுந்து நின்று

'கொற்றவர்க்கு உற்றது' என்றான் = அரசர்களுக்கு ஏற்றது என்றான்

'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன் =  இராவணன் மேல் இரக்கம் கொள்வது இழுக்கு என்றான்


'இனி,  நாம் அம்பு துரக்குவது அல்லால் = இனி நாம் அம்பு விடுவதைத் தவிர


வேறு ஓர் சொல் உண்டோ? = வேறு ஒரு சொல்லை விடுவது உண்டா

என்னச் சொன்னான் = என்று சொன்னான்

இதில் கவனிக்க வேண்டியது,


வீடணன்  கூறியது. இராவணனிடம் தூது  அனுப்பி,ஒரு வேளை இராவணன் சமாதானமாகப் போய் விட்டால், வீடணன் கதி என்ன  ஆகும்.

இராவணன், வீடணனை விட்டு வைப்பானா ?

இருந்தும் வீடணன் போரை தவிர்க்க விரும்புகிறான்.

வீடணனை பற்றி கூறும் போது


மேதாவிகட்கு எல்லாம்
    மேலாய மேன்மையான்

என்று கூறுவார்  கம்பர்.




Friday, September 19, 2014

இராமாயணம் - அங்கதன் தூது

இராமாயணம் - அங்கதன் தூது 


இலங்கையின் வாசலில் நிற்கிறான்  இராமன்.இராவணனைக் காணோம். அருகில் நின்ற வீடணனிடம் கூறுகிறான்

"ஒரு தூதுவனை விரைவில் அனுப்புவோம். இப்போதாவது சீதையை விடுகிறானா என்று கேட்போம். விடவில்லை என்றால் அவனை அழிக்கலாம். அது தான் அறமும் நீதியும் அதுதான். என் மனமும் அதைத்தான் நினைக்கிறது"  என்று சொன்னான் கருணையின் இருப்பிடமான இராமன்.


பாடல்

'தூதுவன் ஒருவன்தன்னை இவ் வழி விரைவில் 
தூண்டி,

"மாதினை விடுதியோ?" என்று உணர்த்தவே,
மறுக்கும்ஆகின்,

காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது; அறனும்

அஃதே;

நீதியும் அஃதே' என்றான்--கருணையின் நிலயம்
அன்னான்.


பொருள்


'தூதுவன் ஒருவன்தன்னை = தூதுவன் ஒருவனை

இவ் வழி  = இந்த வழியில்

விரைவில் தூண்டி = விரைவில் அனுப்பி

"மாதினை விடுதியோ?" என்று  உணர்த்தவே = சீதையை விடுகிறாயா என்று கேட்போம்

மறுக்கும்ஆகின் = அவன் (இராவணன் ) விட மறுத்தால்

காதுதல் கடன் என்று = அவனை அழிப்பது கடமை என்று

உள்ளம் கருதியது = என் உள்ளம் கருதுகிறது

அறனும் அஃதே = அறமும் அதுவே

நீதியும் அஃதே' = நீதியும் அதுவே

என்றான் = என்றான்

கருணையின் நிலயம் அன்னான் = கருணை நிலைத்து நிற்கும் இடமான இராமன்.

இந்த பாடல் நிறைய மறைமுக செய்திகளை கொண்டுள்ளது.

1.  வாலியை கொல்ல இராமன் யாரையும் தூது அனுப்பவில்லை.  சுக்ரீவன் மனைவியை விட்டு விடு , இல்லை என்றால் யுத்தத்துக்கு வா என்று சொல்லி தூது விட்டிருக்கலாம். அனுமனை அனுப்பி இருக்கலாம். இராமன் செய்யவில்லை. அந்த தவறை இப்போது உணர்து கொண்டான். இராவணனிடம் தூது  அனுப்புகிறான்.


2. வாலியை கொல்வதற்கு முன்னால், யாரிடமும் யோசனை கேட்கவில்லை. இது நான் எடுத்த முடிவு என்று செயல் படத் தொடங்கி விடுகிறான். இப்போது, வீடணனிடம்  யோசனை  கேட்க்கிறான்.தவறில் இருந்து இராமன் படித்த  பாடங்கள்  இவை.

3. தவறு செய்வது யாருக்கும் இயல்பு. அதில் இருந்து பாடம் படிக்க வேண்டும். இது இராமன்  காட்டிய  வழி.

4. மூன்று செய்திகளை சொல்கிறான்.

என் மனம் நினைப்பது, அறம் , நீதி.

இந்த மூன்றும்  ஒத்துப் போகிறது. மூன்றும் ஒத்துப் போக வேண்டும் வாழ்க்கையில். அறம் அல்லாத வழியில் மனம் போகக் கூடாது. அறமும் நீதியின்    பால் செயல் பட வேண்டும்.  தவறு செய்பவர்களை தண்டிப்பது அரச தர்மம்.  அதை தீர விசாரித்து, நீதி வழங்க வேண்டும். இவன் தவறு செய்திருப்பான் என்று எனக்குத் தோன்றுகிறது என்று அரசன் தண்டனை தரக் கூடாது .  மனம் ஒத்துக் கொள்ளலாம் ஆனால் அது தர்மமும், நீதியும் அல்ல.

5. கருணையின் நிலையம் அன்னான் என்கிறான்  கம்பன். இராவணனை அழிப்பது எப்படி கருணையான  செயலாகும்.

'அறத்திற்கே அன்பு சார்பு' என்ப, அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.

 என்பது  வள்ளுவம்.

அறத்திற்கு அன்பு துணை என்பவர்கள் அறிய மாட்டார்கள் மறத்திற்கும் அதுவே துணை.

அன்பு என்று சொல்லிக் கொண்டு அநீதிகளை சகித்துக் கொண்டு இருக்கக் கூடாது. மறத்திற்கும் அன்புதான்  அடிப்படை. (இது பற்றி இன்னொரு ப்ளாகில் விரிவாக சிந்திப்போம். )

இராவணன் தவறு செய்திருக்கிறான். உடனே   தண்டித்து  விடலாம் தான்.     இருந்தும் இராமன் செய்யவில்லை. இராவணன் மேலும் கருணை. தன் மனைவியை தூக்கிச் சென்று  சிறை வைத்த இராவணன் மேலும் கருணை  காட்டுகிறான்..


கருணையின் நிலைக் களம். 


சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 4

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 4


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )
===============================பாகம் 3 ==================================

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!


ஓர்தல் என்றால் ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல் என்று பொருள். 


 மலையாளத்தில் "ஓர்மை" என்று ஒரு சொல் உண்டு. நினைவு , ஞாபகம் என்ற  அர்த்தத்தில். 

ஓராதார் உள்ளத்து - ஆராயாமல், சிந்திக்காமல் இருப்பவர்கள் உள்ளத்தில் ஒளிக்கும்  ஒளியானே. 


அது என்ன ஒளிக்கும் ஒளி ?

ஒளியை, வெளிச்சத்தை யாராலும் ஒளித்து வைக்க முடியாது. அது எங்கும்  இருக்கிறது.

இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனதிலும் அவன் இருக்கிறான். ஆனால்  ஒளிந்து இருக்கிறான். வெளிப் படாமல் இருக்கிறான். 

எப்படி என்றால் ....

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் 
மறைய நின்றுளான் மாமணிச் சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று நாவுக்கரசர் கூறியது போல. 

விறகினுள் தீயைப்  போலவும்,பாலினுள் நெய்யைப்  போலவும், மணியின் உள்ளே உள்ள   ஒளி போலவும் மறைந்து   .நிற்கிறான் .அவன். 

விறகை கடைந்தால் ஜோதி வெளிப் படும். 

தயிரைக் கடைந்தால் நெய் வெளிப்படும் 

மணியை பட்டை தீட்டினால் ஒளி வெளிப்படும் 

அது போல இறை சிந்தனை இருந்தால் இறைவன் வெளிப்படுவான். 

இங்கே சற்று நிறுத்தி ஆழமாக சிந்திப்போம்.


இறை சிந்தனை என்று தான்  கூறுகிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகமும் இறை சிந்தனை பற்றித்தான்.  இல்லை என்று சொல்பவனும் இறைவனை பற்றி சிந்திக்கிறான். இறைவன் யார்,  அவன் எப்படி இருக்க  முடியும்,நமக்கு ஒரு சாட்சியும் இல்லையே, அவன் இருக்கிறானா, இல்லையா என்று அவனும் சிந்திக்கிறான். அந்த சிந்தனையின் முடிவில் அவனுக்கும் அந்த இறை சக்தி வெளிப் படலாம். எனவே தான் சைவ சிந்தாந்தம் நாத்திகத்தையும் தன்னுள் கொண்டு இருக்கிறது.  இறைவன் இல்லை என்று சொல்லுபவனும் சைவ மதத்தைச் சார்ந்தவன் தான்.   

"நம்பாதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்று மணிவாசகர் சொல்லவில்லை. 

நம்பச் சொல்லவில்லை. சிந்திக்கச் சொல்கிறார். 

அந்த இறை சக்தி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. சிலரிடம் மறைந்து கிடக்கிறது, சிலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது. 

ஓராதார் உள்ளத்தும் அது இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது. 

ஒரு அரிக்கேன் விளக்கு இருக்கிறது. உள்ளே சுடர் எரிகிறது. வெளியே உள்ள கண்ணாடில்   கரி படிந்து  இருக்கிறது. வெளிச்சம் வெளியே  தெரியாது.

கரியை சுத்தமாக துடைத்தால் வெளிச்சம் பளீரென்று வெளிப்படும். 

அந்த கரி தான்  ஆணவம்,கன்மம் மாயை என்ற அழுக்குகள் (மும்மலம்) என்று சொல்லுவார்கள். 

அழுக்கை நீக்கினால் ஜோதி சுடர் விட்டு வெளிச்சம் தரும். 

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 


இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் மிக மிக ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது சிவ புராணம். 

வாசித்துக் கொண்டே போவதற்கு அல்ல. நீண்ட சிந்தனைக்கு உகந்தது சிவ புராணம். 

மேலும் சிந்திப்போம் 

--------------------------------\பாகம் 4/-----------------------------------------------------------------------------

நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

மனம் நெகிழ வேண்டும். மனம் நெகிழாதவர்களை "சரியான கல் நெஞ்சக் காரன்" என்று  சொல்லுவோம்.

இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால் மனம் இளகி மெத்தென்று இருக்க வேண்டும். 

கல்லின் மேல் பாதம் படியுமா ?

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர். மனமாகிய கல் நெகிழ்ந்து உருக வேண்டும்.  


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

அவர்கள் மனம் கல் என்றால் நம் மனம் எல்லாம் இரும்பாக இருக்கும். 

உருகி என்றால் எவ்வளவு உருக வேண்டும் ? நீர் போல உருகி ஓட வேண்டும். 

இளகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றாகக் கலந்து  விடுவான்.

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 

மனம்  உருகிய பின் சீவன் வேறு சிவன் வேறு அல்ல. நான் வேறு அவன் வேறு என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டு அல்லாடுகிறோம். மனம் உருகும்போது பிரிவினையும் உருகி  விடுகிறது.இரண்டும் ஒன்றாக கலந்து விடுகிறது. 


(அடுத்த வரியை நாளை சிந்திப்போம்) 













Thursday, September 18, 2014

விவேக சிந்தாமணி - சேலை கட்டிய மாதர் 


ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் 
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம் 
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் 
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே! 

எவ்வளவோ அறங்களை எடுத்துச் சொல்லும் நம் தமிழ் இலக்கியங்கள், பெண்களின் ஆற்றலை குறைத்தே மதிப்பிடுகிறதோ என்று தோன்றுகிறது.

ஏன் பெண்களை நம்பக் கூடாது ?

மற்ற அனைத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு, ஒரு குணம் உண்டு, அவை அப்படித்தான்  இருக்கும்.

பெண்கள் அப்படி அல்ல.  அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன அவர்களின் தேவை என்று அவர்களுக்கே தெரியுமோ  என்னவோ.

 அவர்களை நம்பி ஒரு காரியம் செய்யப் போனால் , இடையில் அவர்கள் மனம் மாறி விட்டால் ?

ஒரு வேளை அப்படி அலை பாயும் மனதை நினைத்துதானோ என்னவோ இந்தப் பாடலை எழுதி இருப்பார்கள் ?